திருமண்டங்குடி சர்க்கரைஆலை விவசாயிகள் நீதி கேட்டு 125வது நாள் போராடி வரும் நிலையில் முதலமைச்சர் வாய் திறக்க மறுப்பதின் மர்மம் என்ன?பி ஆர் பாண்டியன் கேள்வி

0 193

திருமண்டங்குடி சர்க்கரைஆலை விவசாயிகள் நீதி கேட்டு 125வது நாள் போராடி வரும் நிலையில் முதலமைச்சர் வாய் திறக்க மறுப்பதின் மர்மம் என்ன?
பி ஆர் பாண்டியன் கேள்வி

தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் சுமார் 400 கோடி ரூபாய் விவசாயிகள் பெயரில் கடனை பெற்று மோசடி செய்துள்ளதை கண்டித்து 125 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை நிறுவனம் விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகையாக 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலும் ரூபாய் 122 கோடி நிலுவை வைத்துள்ளது. அக்காலகட்டங்களில் உற்பத்திக்கு பெற்ற கடன் திரும்ப செலுத்த முடியாமல் வங்கிகளின் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இது மட்டுமின்றி விவசாயிகளுக்கு தெரியாமலேயே விவசாயிகள் பெயரில் மோசடியாக பல்வேறு வங்கிகளில் ரூ400 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளது. தற்போது விவசாயிகளை வங்கிகள் நீதிமன்ற நடவடிக்கை எடுத்து கருப்பு பட்டியலில் இணைத்துள்ளனர்.இதனை அறிந்து 2019 ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திமுக 2021 தனது தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளை அழைத்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆரூரன் சக்கரை ஆலையை அரசுடைமை ஆக்கி,விவசாயிகள் பெயரில் மோசடி செய்துள்ள கடன் தொகையை வங்கிகளுக்கு ஈடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உத்தரவாதம் கொடுத்தார்கள். அதனை நம்பி வாக்களித்த விவசாயிகளை இன்றைக்கு அரசு ஏமாற்றி வருகிறது.

ஆரூரான் சர்க்கரை ஆலையை கால்ஸ் என்கிற அதிகாரப் பின்புலம் கொண்ட நிறுவனம் விலைக்கு வாங்கி உள்ளனர். விவசாயிகள் பெயரில் வங்கிகளின் கடன் நிலுவைத் தொகையை ஈடு செய்ய மறுப்பதோடு,நீதி கேட்டு போராடுகிற விவசாயிகளை காவல்துறை மூலம் வழக்கு போட்டு அச்சுறுத்துகிறது.

2019 ல்விவசாயிகள் போராட்டத்தை ஏற்று அன்றைக்கு ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான காவல்துறை ராம்வி தியாகராஜனை கைது செய்து கடலூர் காவல் நிலையத்தில் சிறை வைத்தது. ஆனால் இன்றைக்கு ஸ்டாலின் தலைமையிலான அரசு விவசாயிகள் வழக்கு போட்டு மிரட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலை பிரச்சனை குறித்து எழுப்பிய போது வேளாண் துறை அமைச்சர் பதிலளிக்க மருத்தது ஏன்?கல்வி அமைச்சர் விரைவில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணப்படும்என்று உத்தரவாதப்படுத்தினார். இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு மாவட்ட நிர்வாகமோ, துறைசார அமைச்சர்களோ தீர்க்க முடியாது. முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும். தலைமைச் செயலாளர் தலைமையில் வங்கியாளர்கள் கூட்டத்தை நடத்தி கடன் நிலுவை குறித்து உண்மை நிலையை அறிய வேண்டும். விவசாயின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை திரும்ப பெற முயற்சிக்க வேண்டும்.

குறிப்பாக வங்கி கடன் என்பது மயிலாடுதுறை. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பெயரில் அரியலூர், பெரம்பலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் வங்கிகளில் கடன் பெற்றுள்ளதாக வங்கியாளர்கள்
பட்டியல் வைத்துள்ளனர்.

மாறாக ஆலையை வாங்கி உள்ள நிர்வாகத்திற்கு ஆதரவாக விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க நினைப்பது ஏற்கத்தக்கது அல்ல.திராவிட ஆட்சி என்கிற பெயரில் விவசாயிகளை அடக்கி வைக்க முயற்சிப்பதும், போராடும் விவசாயிகளை பிளவுபடுத்த நினைப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எனவே உடனடியாக விவசாயிகள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காண முன்வர வேண்டும்.அரசு மருக்குமேயானால் விவசாயிகளை திரட்டி ஆலய கைப்பற்ற தயங்க மாட்டோம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கிறேன்

இது ஏதோ விவசாயிகள் ஆலைக்கு எதிராக நடத்துகிற போராட்டம் அல்ல. இது தமிழக அரசுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கிற போராட்டம். விரைவில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளது. எனவே வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசு மீது விவசாயிகள் தேர்தல் களத்தில் எதிர்வினையாற்ற தயங்க மாட்டோம் என நான் எச்சரிக்கிறேன்.

தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில்ஆலை நிர்வாகி ராம் வி.தியாகராஜன் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்கள். அதன் மீது உடன் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்கானிப்பாளர் முன்வரவேண்டும் என்றார்.

போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார். முருகேசன் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் எம்.கிருஷ்ணமணி மாநில துணைச் செயலாளர் எம் செந்தில்குமார் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் பாட்ஷா ரவி, கோட்டூர் ஒன்றிய செயலாளர் தெய்வமணி, அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.