டெல்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர் வாக்களிக்க முடியாது

0 110

புது­டெல்லி: டெல்லி மேயர் தேர்­த­லில் நிய­மன உறுப்­பி­னர்­ வாக்­க­ளிப்­ப­தற்கு அனு­மதி இல்லை என்­றும் இதற்­கான அர­சி­ய­ல­மைப்பு விதி­மு­றை­கள் தெளி­வாக உள்­ள­தா­க­வும் உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள் அமர்வு குறிப்­பிட்டு உள்­ளது.

டெல்லி மாந­க­ராட்­சி­யில் மொத்­த­முள்ள 250 இடங்­க­ளுக்கு கடந்த டிசம்­ப­ரில் நடை­பெற்ற தேர்­த­லில், ஆம் ஆத்மி 134, பாஜக 104, காங்­கி­ரஸ் 9, சுயேச்­சை­கள் 3 இடங்­க­ளை­யும் பெற்று வெற்­றி­பெற்­ற­னர்.

இந்­நி­லை­யில், ஆம் ஆத்மி கட்­சிக்­கும் பாஜ­க­வுக்­கும் இடையே ஏற்­பட்ட மோதல் கார­ண­மாக மேயர் தேர்­தல் அடுத்­த­டுத்து தள்­ளி­வைக்­கப்பட்­டது.

மூன்று முறை முயற்சி செய்­தும் தேர்­தலை நடத்­து­வ­தில் தோல்­வியே ஏற்­பட்­டது.

இந்­தச் சூழ­லில், டெல்லி மேயர் தேர்­தலை காலக்­கெ­டு­வுக்­குள் நடத்தி முடிக்க உத்­த­ர­வி­டக் கோரி உச்ச நீதி­மன்­றத்­தில் ஆம் ஆத்மி மேயர் வேட்­பா­ளர் ஷெல்லி ஓப­ராய் வழக்­குத் தொடர்ந்­தார்.

இவ்­வ­ழக்கு தலைமை நீதி­பதி டி.ஒய். சந்­தி­ர­சூட் தலைமை யிலான அமர்வு முன் மீண்­டும் விசா­ர­ணைக்கு வந்­தது.

அப்­போது “தேர்­த­லில் நிய­மன உறுப்­பி­னர்­கள் வாக்­க­ளிக்க முடி­யாது. அர­சி­ய­ல­மைப்பு விதி முறை­கள் மிக­வும் தெளி­வாக உள்­ளது,” என்று அமர்வு குறிப்­பிட்­டது. இதை­ய­டுத்து இவ்­வ­ழக்கை வரும் 17ஆம் தேதிக்கு உச்ச நீதி­மன்­றம் ஒத்­தி­வைத்­தது.

இதைத்­தொ­டர்ந்து நாளை 16ஆம் தேதி நடக்க இருந்த மேயர் தேர்­தல் நாளை மறு­நாள் 17ஆம் தேதிக்­குப் பிறகு நடத்­த வாய்ப்­புள்­ள­தாக நீதி­மன்­றத்­தில் துணை நிலை ஆளு­நர் அலு­வ­ல­கம் சார்­பில் முன்னிலையான கூடு­தல் சொலி­சிட்­டர் ஜென­ரல் சஞ்­சய் ஜெயின் கூறி­னார்.

Leave A Reply

Your email address will not be published.