நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறது இந்தியா பாதுகாப்பு சவாலை எதிர்கொள்ள ஓரணியில் இணையவேண்டும்

0 103

பெங்­க­ளூரு: பாது­காப்பு சவால்­களை எதிர்­கொள்ள ஒன்­றி­ணைய வேண்­டும் என்று நட்பு நாடு­க­ளுக்கு பாது­காப்­புத் துறை அமைச்­சர் ராஜ்­நாத் சிங் அழைப்பு விடுத்­துள்­ளார்.

பெங்­க­ளூ­ரு­வில் நடை­பெற்ற விண்­வெ­ளிக் கண்­காட்­சி­யில் நேற்று பங்­கேற்­ற­போது அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

பல்­வேறு நாடு­க­ளின் பாது­காப்பு அமைச்­சர்­களும் கலந்­து­கொண்ட கண்­காட்சி நிகழ்­வில் ராஜ்­நாத் சிங் பேசி­ய­போது, “உதவி தேவைப்­படும் நாடு­களுக்கு அறி­வு­ரை­கள் கூறு­வதோ வெளிப்­ப­டைத் தன்மையின்றி தீர்­வு­களை வழங்­கு­வதோ எந்த ஒரு பய­னும் தராது. இதில் இந்­தி­யா­வுக்­கும் நம்­பிக்கை இல்லை.

“அனைத்து நாடு­க­ளை­யும் இந்தியா சம­மா­கக் கரு­து­வ­தால்­தான் உத்­த­ர­வி­டு­வ­தில் நம்­பிக்கை கொண்­டி­ருக்­க­வில்லை,” என்­றார்.

தொடர்ந்து பேசி­ய­வர், “வளர்ந்த நாடு என்­ப­தா­லும் ராணு­வம், தொழில்­நுட்­பத்­தில் முன்­னே­றிய நாடு என்­ப­தா­லும் ஒரு நாடு மற்ற நாட்­டி­டம் அதி­கா­ரத் தோர­ணை­யு­டன் உத்­த­ரவு­க­ளைப் பிறப்­பிக்க முடி­யாது,” என்று தெரி­வித்தார்.

உதவி என்­பது நிறு­வ­னங்­க­ளைக் கட்டமைப்பதாக, இணக்க மான முறையில் செயல்படுவதாக இருக்கவேண்டும் என்றும் இந்­தியா தனது நட்பு நாடு­க­ளுக்கு இத்­த­கைய பாது­காப்பு உத்­த­ர­வாதத்தை அளிக்­கவே விரும்­பு­கிறது என்றும் கூறினார்.

“நாங்­கள் உங்­க­ளோடு இணைந்து இருப்­போம்; தோளோடு தோள் கொடுத்து, வளர்ச்­சியை உரு­வாக்­கு­வோம்.

“இரு நாடு­க­ளுக்கு இடை­யே­யான உறவு மதிப்­பு­மிக்­க­தாக இருப்­பது அவ­சி­யம்.

“ஒரு நாடு மற்ற நாட்­டி­டம் இருந்து கற்­றுக்­கொள்ள வேண்­டும்; இணைந்து வளர வேண்­டும். இது­தான் இரு தரப்­புக்­கும் வெற்றி தரக்கூடிய வழி­முறை,’’ என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரி­வித்­துள்ளார்.

மேலே இருந்துகொண்டு கீழே இருப்பவர்களுக்கு உத்தரவிடும் அணுகுமுறை ஒருபோதும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு தராது. கீழே இறங்கி வந்து தோளோடு தோள் நின்று வழங்கப்படும் தீர்வுகள்தான் நீடித்த நல்ல பலனை அளிக்கும்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Leave A Reply

Your email address will not be published.