வாழ்க்கையைக் கொண்டாட விரும்பிய புற்றுநோயாளியின் கடைசி ஆசை

0 77

பானாஜி: “எனக்­கான வாழ்க்கை யைக் கடை­சி­யாக ஒரு­முறை கொண்­டாட விரும்­பு­கி­றேன்,” என்று கூறிய ஒரு புற்­று­நோ­யா­ளி­யின் கடைசி ஆசையை அவ­ரது குடும்­பத்­தா­ரும் மருத்­து­வர்­களும் சேர்ந்து நிறை­வேற்றி வைத்­த­னர்.

அந்­தக் கொண்­டாட்­டம் முடி­வுற்ற அன்­றைய இரவே அந்த இளம் நோயா­ளி­யின் கண்­ணீர் நிறைந்த பய­ணம் முடி­வுக்கு வந்தது. இந்த நெகிழ வைக்­கும் சம்­ப­வம் தொடர்­பான செய்­தி­யும் புகைப்­ப­டங்­களும் சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கின்­றன.

கோவா­வைச் சேர்ந்­த­வர் ஆஷ்லே நோரோன்ஹா. 28 வய­தான அவர், Myeloid Leukamia என்ற புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார்.

தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வந்த நிலை­யில், அவ­ரது நோய் முற்­றிப்­போ­னது.

மர­ணத்­தின் வாயி­லில் நிற்பதை உணர்ந்த ஆஷ்லே, அதற்­காக கண்­க­லங்­க­வில்லை. மாறாக, வாழ்­வின் கடை­சித் தரு­ணங்­க­ளைக் கொண்­டாட முடிவு செய்­தார். அவ­ரது இந்த விருப்­பம் குடும்­பத்­தார் மூலம் அவ­ரது சிகிச்சை, பரா­ம­ரிப்­புக்கு உதவி வந்த சமூக அமைப்­பின் நிர்­வாகத்­துக்கு தெரி­விக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து ‘பிரிவு உப­சார’ நிகழ்வு போன்ற கடை­சிக் கொண்­டாட்­டத்­துக்கு அந்த அமைப்பு ஏற்­பாடு செய்­தது. அவ­ரது அறையை பலூன்­கள் கொண்டு அலங்­க­ரித்­த­னர்.

தாம் நோயா­ளி­யா­கக் காட்­சி­அளிப்­பதை ஆஷ்லே விரும்­ப­வில்லை. அத­னால் அவ­ரது பல நாள் தாடி­யும் மீசை­யும் மழிக்­கப்­பட்­டது. தலை­மு­டி­யும் திருத்­தப்­பட்டு, லேசான ஒப்­ப­னைக்­குப் பிறகு தலை­யில் தொப்­பி­யு­ட­னும் உற்­சா­கப் புன்­ன­கை­யு­ட­னும் புகைப்­ப­டத்­துக்­குப் ‘போஸ்’ கொடுத்­தார் ஆஷ்லே.

குடும்­பத்­தா­ரு­டன் ஓரிரு மணி நேரங்­கள் சிரித்­துப் பேசி­யவருக்கு, கொண்­டாட்­டம் நடை­பெற்ற அறை­யில் அலங்­கா­ரத்­துக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த பலூன்­களே பரி­சு­க­ளாக வழங்­கப்­பட்­டன.

அன்­றைய இரவு அனை­வரிடமும் விடை­பெற்று படுக்­கச் சென்ற ஆஷ்லே பின்­னர் கண்­விழிக்­கவே இல்லை. கடந்த மாத இறு­தி­யி­லேயே அவர் கால­மா­கி­விட்ட நிலை­யில், அந்­தக் கடைசி நிகழ்வு குறித்த தக­வல் சமூக ஊட­கங்­களில் இப்போது பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது.

“நல்ல பாடல்­களை ஒலிக்கச் செய்து கேட்­டார். நகைச்­சு­வை­யாகப் பேசி­னார். சோக­மாக இருந்­தால் புற்­று­நோய் விரை­வாக தன் உயி­ரைப் பறித்­து­வி­டும் எனச் சிரித்­த­படி கூறி­னார்.

“மர­ணம் தழு­வும் கடைசி நொடி­யில் ஆஷ்லே தன் மன­தில் என்ன நினைத்­தார் என்­பது தெரி­யாது. ஆனால் எங்­க­ளி­டம் இருந்து சிரித்த முக­மாய் விடை­பெற்­றார். நாங்­கள்­தான் அழுது கொண்­டி­ருக்­கி­றோம்,” என்று ஆஷ்­லே­யின் குடும்­பத்­தார் கூறு­கின்­ற­னர்.

Leave A Reply

Your email address will not be published.