திருவாடானை: வழக்கறிஞர் பயிற்சிக்கூட்டம்

0 159

நீதிபதி பரணிதரன் தலைமையில் நடந்தது.

தொண்டி, ஜூன்.30-
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் நீதிபதி பரணிதரன் தலைமையில் நடைபெற்றது. தேவகோட்டை நீதிமன்ற அரசு வழக்கறிஞர் செந்தில் வேலவன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கணேசபிரபு வரவேற்றார். இதில் வழக்கறிஞர்களுக்கு சட்டம் சார்ந்த கருத்துக்கள் கூறி பயிற்சியளிக்கப்பட்டது. திருவாடானை நீதிமன்ற நீதிபதிகள் பிரசாத். மணீஸ்குமார், மாவட்ட அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்..

செய்தி.படம்.தொண்டி ஜெயந்தா

Leave A Reply

Your email address will not be published.