தமிழில் தீர்ப்பு எழுதும் காலம் விரைவில் வரும்: நீதிபதி ராஜா

0 138

சென்னை: கீழமை நீதி­மன்­றங்­களில் தமி­ழில் வாதாடி, தமி­ழில் தீர்ப்­புரை பெறும் வழக்­கம் உள்­ளது. எனி­னும், இந்­தப் பழக்­கம் உயர் நீதி­மன்­றத்­தி­லும் வர வேண்­டும். தாய்­மொ­ழி­யி­லேயே நீதி வழங்கி, தமி­ழிலே தீர்ப்­புரை எழு­தும் காலம் விரை­வில் வரும் என சென்னை உயர் நீதி­மன்ற தலைமை நீதி­பதி (பொறுப்பு) ராஜா நம்­பிக்கை தெரி­வித்­தார்.

சென்னை புதுப்­பாக்­கத்­தில் உள்ள டாக்­டர் அம்­பேத்­கர் அரசு சட்­டக் கல்­லூரி வளா­கத்­தில் நடை­பெற்ற நிகழ்வு ஒன்­றில் பேசிய அவர், “மாநில அள­வில் தமி­ழில் மாதிரி நீதி­மன்­றப் போட்­டி­கள் தற்­போ­து­தான் நடத்­தப்­ப­டு­கின்­றன. இது மிக­வும் ஆரோக்­கி­ய­மான ஒன்று.

“தமி­ழுக்கு நாம் செய்­யும் தொண்டு மட்­டு­மின்றி தமிழ் வள­ர­வேண்­டும் என்ற அடிப்­படைக் கார­ண­மும் உள்­ளது. இம் முயற்சி வெற்றிபெறக் கார­ணம், இந்­தி­யா­வி­லேயே முதல் செம்­மொ­ழி­யாக அறி­விக்­கப்­பட்­டது தமிழ்­தான்.

“உல­கத்­தின் பல்­வேறு நாடு­களில் தாய்­மொ­ழி­யில்­தான் நீதி­மன்ற விவா­தங்­கள் நடை­பெ­று­கின்­றன. உல­கத்­தில் ஒரு வல்­ல­ரசு நாடாக ஜப்­பான் உரு­வா­வ­தற்கு கார­ணம், அந் நாட்டு மக்­கள் சொந்த மொழி­யில்தான் பேசு­கி­றார்­கள்.

“தாய்­மொ­ழி­யில் நாம் ஒரு விஷ­யத்தை நினைத்­துப் பார்க்­கும்­போதும் யோசிக்­கும்­போதும் பிரச்­சினை வரு­வது கிடை­யாது. அவ்­வாறு வந்­தா­லும் சாதா­ரண முறை­யில் நம்மால் தீர்வு காணமுடி­யும்.

“நாமும் தமி­ழிலே வழக்­காடி, தமி­ழி­லேயே சிந்­திப்­போம். தமி­ழில் தீர்ப்­புரை எழு­தும் காலம் விரை­வில் வரும். இதன் கார­ண­மாக மேல் முறையீட்டு வழக்­கு­கள் குறைந்து நீதி­மன்­றத்­தின் சுமை குறை­யும்,” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.