திருமண ஆசை காட்டி பெண்களிடம் நகை, பணம் கொள்ளை

0 104

சென்னை: நீண்­ட­நாள் திரு­ம­ணம் ஆகாத பெண்­க­ளி­டம் திரு­மண ஆசை காட்டி நகை, பணத்­தைப் பறித்து வந்த ஆட­வர் பிடி­பட்­டார்.

முக­மது உபேஸ், 37, எனப்­படும் அவர் வேலூர் காந்­தி­நகரைச் சேர்ந்­த­வர். திரு­ம­ணத் தக­வல் மையம் ஒன்­றில் பதிவு செய்து மாப்­பிள்ளை தேடி வந்த புதுக்­கோட்டை, ஆலங்­கு­டி­யைச் சேர்ந்த ஓர் இளம்­பெண்ணை உபேஸ் தொடர்­பு­கொண்­டார். திரு­ம­ணத் தக­வல் மையத்­தில் புகைப்­ப­டத்­தைப் பார்த்­துப் பிடித்­துப்­போய்­விட்­ட­தா­க­வும் சந்­திக்க ஆசைப்­ப­டு­வ­தா­க­வும் அந்­தப் பெண்­ணி­டம் உபேஸ் கூறி­ய­தைத் தொடர்ந்து கடந்த டிசம்­பர் 13ஆம் தேதி சென்னை ராயப்­பேட்­டைக்கு அப்­பெண் வந்­தார்.

அவ­ரைச் சந்­தித்­துப் பேசிய உபேஸ், தமக்கு அவ­ச­ர­மா­கப் பணம் தேவைப்­ப­டுவ­தா­க­வும் நகை­யைக் கொடுத்­தால் திரு­

ம­ணத்­தின்­போது திருப்­பிக் கொடுத்­து­வி­டு­வ­தா­க­வும் கூறி­னார். அதனை நம்­பிய இளம்­பெண் 20 பவுன் நகை­க­களை அவ­ரி­டம் கொடுத்­தார். அதன் பிறகு உபேஸை அந்­தப் பெண்­ணால் தொடர்­பு­கொள்ள இய­ல­வில்லை. தாம் ஏமாற்­றப்­பட்­டதை உணர்ந்த அவர், அண்­ணா­சாலை காவல் நிலை­யத்­தில் உபேஸ் மீது புகார் கொடுத்­தார்.

தனிப்­படை அமைத்து தேடி­வந்த காவல்­து­றை­யி­னர் ஈரோட்­டில் உபே­ஸைக் கைது செய்­த­னர். அவ­ரி­டம் இருந்து ஒரு லட்­சம் ரூபாய் ரொக்­கம் ஒன்­ற­ரைப் பவுன் நகை­களை காவல்­து­றை­யி­னர் பறி­மு­தல் செய்­த­னர்.

நீண்­ட­நாள்­ திரு­ம­ணம் ஆகாத பெண்­க­ளை­யும் வித­வைக­ளை­யும் குறி­வைத்து, அவர்­க­ளி­டம் திரு­மண ஆசை காட்டி பல பெண்­களை ஏமாற்­றிய குற்­றத்தை அந்த ஆட­வர் ஒப்­புக்­கொண்­டார்.

Leave A Reply

Your email address will not be published.