மியன்மாரில் குண்டு வெடிப்பு: மூவர் மரணம்

0 99

யங்­கூன்: மியன்­மா­ரின் ரயில்வே நிலை­யம் ஒன்­றில் நிகழ்ந்த குண்டு வெடிப்­பில் குறைந்­தது மூவர் மாண்­ட­னர், ஒன்­பது பேர் காய­முற்­ற­னர். அந்­நாட்­டின் ராணுவ அர­சாங்­க­மும் உள்­ளூர் ஊட­கங்­களும் இத்­தக­வ­லைத் தெரி­வித்­தன.

பாகோ வட்­டா­ரத்­தில் உள்ள நியா­வுங்­லே­பின் நக­ரின் ரயில்வே நிலை­யம் ஒன்றில் சம்­ப­வம் நிகழ்ந்­தது. அந்­நகரம் யாங்­கூன் நக­ருக்கு சுமார் 150 கிலோ­மீட்­டர் தொலை­வில் உள்ளது.

குண்டு வெடிப்பு உள்­ளூர் நேரப்­படி நேற்று முன்­தி­னம் பிற்­ப­கல் 12.20 மணி­ய­ள­வில் நிகழ்ந்­த­தென மியன்­மாரின் ராணுவ அர­சாங்­கம் தெரி­வித்­தது. குண்டு வெடிப்­புக்கு ராணுவ ஆட்­சிக்கு எதி­ரா­கச் செயல்­படும் பிடி­எஃப் எனும் மக்­கள் தற்­காப்­புப் படை­ கார­ணம் என்று அரசாங்கம் தனது அறிக்கையில் கூறியது.

Leave A Reply

Your email address will not be published.