12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை காப்பாற்றுவாரா முதல்வர் ஸ்டாலின் :

0 98

அரசு பள்ளிகளில் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் 12ஆண்டாக ரூபாய் 10ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிகிறார்கள்.

இவர்கள் கணினி, ஓவியம், உடற்கல்வி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய கல்வி இணைச் செயல்பாடுகளை கற்று தருகிறார்கள்.

2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்து இருந்தார்.

திமுக வெற்று பெற்றதும் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

திமுக முதல் இரண்டு பட்ஜெட்டிலும் பணிநிரந்தரம் அறிவிக்கவில்லை என்பதால் ஏமாற்றத்துடன் காணப்படுகின்றனர்.

இந்த நிலையில் மூன்றாவது பட்ஜெட் மார்ச் 20 அன்று படிக்கப்பட்ட போதிலும் பணிநிரந்தரம் அறிவிப்பு இல்லாததால், பகுதிநேர ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு 40ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கை மார்ச் 31 அன்று நடக்கிறது.

அதிலாவது பணிநிரந்தரம், காலமுறை சம்பளம் முதல்வர் அறிவிக்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

தேர்தலில் திமுக வாக்குறுதியை நம்பி வாக்களித்த 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களின் எதிர்காலம் காக்க கை கொடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்.

இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது :

முதல்வர் திமுக வாக்குறுதி 181ஐ நிறைவேற்ற தனது அமைச்சரவையில் கொள்கை முடிவெடுத்து செயல்படுத்த வேண்டும்.

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யுங்கள் என முதல்வர் ஆணையிட வேண்டும்.

காலமுறை சம்பளம், பணிநிரந்தரம் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களை வாழ வைக்கும்.

ஏற்கனவே 10 ஆண்டு காத்திருந்த எங்களுக்கு, வாக்குறுதி கொடுத்த திமுக ஆட்சிக்கு வந்தும் இரண்டு ஆண்டாக தாமதம் செய்யலாமா?

சட்டசபையில் பல உறுப்பினர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய பேசி உள்ளார்கள்.

அரசியல் கட்சிகள் அனைத்தும் அறிக்கை மூலமாக அரசை வலியுறுத்தி உள்ளது.

நாங்களும் மனுக்களை குவிக்கிறோம்.

முதல்வர் மனசு வைத்தால் போதும்.


எஸ்.செந்தில்குமார்
செல் : 9487257203
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,

மாநில ஒருங்கிணைப்பாளர்

Leave A Reply

Your email address will not be published.