உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த திருவள்ளுவர்சிலை திறப்பு விழா

91

உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலையை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.மணிக்கண்ணன் அவர்கள் திறந்து வைத்து பேசினார், அருகில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.சரஸ்வதி, நகர மன்ற தலைவர் திரு.திருநாவுக்கரசு, துணைத் தலைவர் திரு.வைத்தியநாதன், பி டி ஏ தலைவர் திரு.சிவராஜ், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பி டி ஏ தலைவர் திரு. டேனியல்ராஜ், தலைமை ஆசிரியர் திரு. கலைச்செல்வன் உள்ளிட்ட பி டி ஏ நிர்வாகிகள் அம்பிகாபதி, இரமேஷ்பாபு, நகர மன்ற உறுப்பினர்கள், திருமதி. கலா சுந்தரமூர்த்தி, செல்வகுமாரி இரமேஷ்பாபு, மனோபாலன், சிவசங்கரி சந்திரகுமார், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பாராட்டு

இந்த சிலையை ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் வடிவமைத்து கொடுத்த ஜவகர்லால் கல்லூரி தாளாளர் திரு.ஜெயராமன் அவர்களுக்கு பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. சூர்யா

Comments are closed.